Saturday, September 19, 2009

கேட்கப்படாத ஒரு புள்ள பூச்சியின் குரல் (நியாயம்).!

கல்லூரியில் நான்கு வருடங்களும் நான் விடுதியிலேயே தங்கிப் படித்தேன். கடைசி வருடம் மட்டும் நான் வெளியில் அறை எடுத்து தங்குகிறேன் என்று சொன்னதற்கு வீட்டில் மறுத்து விட்டார்கள். கெட்டுப் போய் விடுவேனாம்.நானெல்லாம் " நீ ஊதவே வேணாம் பெருசு" கேஸ் என்பது தெரியாதல்லவா?. வேறு வழியின்றி நான் விடுதியிலேயே தங்க வேண்டியதாயிற்று.

விடுதி எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களையும் சில கசப்பான அனுபவங்களையும் அளித்திருக்கிறது. பொதுவாக வகுப்பில் ஒரு மூலையில் உக்கார்ந்து "அண்ணே எனக்கு எது புடிக்கலியோ தூங்கிடுவேன்..!" என்று செந்தில் பாணியில் உறங்குபவன் நான்.நான்கு வருடங்களில் வெகு சில பேராசிரியர்கள் தவிர என் பெயர் யாருக்கும் தெரியாது. நாம யாரு வம்புக்கும் போறதில்ல யாரு தும்புக்கும் போறதில்ல.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம் என்று வடிவேலு பம்மும் விதமாக பம்மிக்கொண்டே வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்வாறு பிரச்சனை இன்றி கழிந்தது.பரீட்சை நேரங்களில் கூட்டாக சேர்ந்து படிப்பது, அலாரம் வைத்து நள்ளிரவில் எழுந்து படிப்பது என்று இனிய விதமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன.மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது சனிதிசை எனக்கு.

Thursday, September 10, 2009

கவிதை எனப்படுவது யாதெனில்..!

கவிதை எனப்படுவது யாதெனில் வரிவரியா
யெழுதப் படுமுரை நடையாம் .
ரீமிக்ஸ் குறள் நன்றாக இருக்கிறதா? இல்லாவிட்டால் காறி துப்பவும் :-)...

கவிதை எழுவது ஒரு நுட்பமான விஷயம். எல்லோராலேயும் அது முடியாது. "ஒரு ஸ்வீட் ஸ்டாலே" ஒண்ணுக்குக் கீழ ஒண்ணு.. அதானப்பா கவித... "பணியாரம் சாப்பிடுகிறதே" அடடே... ஆச்சரியக்குறி ... என்பதல்ல கவிதை.