Wednesday, July 29, 2009

தேங்காயும் புட் பாலும்...!

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.


இது கவி காளமேகம் எழுதிய ஒரு சிலேடை . இதை இரட்டுற மொழிதல் என்றும் சொல்வார்கள். இரண்டு பொருள் வரும்படி ஒரே வார்த்தைகளால் பாடுவது சிலேடை. இதன் அர்த்தம் பார்ப்போம் .
நஞ்சிருக்கும் - பாம்பு கொடிய விஷமுடையது
வாழைப்பழம் நைந்து (கனிந்து ) இருக்கும்.
தோலுரிக்கும் - பாம்பு அடிக்கடி தோல் உரிக்கும்.
வாழைப்பழம் தோலுரித்து உண்ணப்பட வேண்டியது.
நாதர்முடி மேலிருக்கும்- பாம்பு சிவபெருமான் தலையில் இருக்கும்.
வாழைப்பழம் பஞ்சாமிர்தமாக அபிஷேகம்
செய்யப்பட்டு லிங்கத்தின் மீது காணப்படும்.
வெஞ்சினத்தில் பல்
பட்டால் மீளாது - பாம்பு கொத்தினால் நம் உயிர் மீளாது.
கூட்டு பொரியலாக செய்யப்படும் வாழைக்காய்
மீது நம் பல் பட்டால் அது மிஞ்சாது.

இவ்வாறு தேன் பாயும் சோலைகள் உள்ள திருமலைராயன் மலையில் பாம்பும் வாழைப்பழமும் ஒன்றாகும். என்பதே இதன் அர்த்தம்.

http://pm.tamil.net/pub/pm0220/kalamega.pdf


என்னடா ஏதோ foot ball தேங்காய் என்று தலைப்பிட்டுவிட்டு செய்யுளுக்கு விளக்கம் தருகிறானே என்று பார்க்கிறீர்களா? தொடர்பு உண்டு.

Wednesday, July 22, 2009

கேள்வியும் நானே...! பதிலும் நானே..!

நான் எட்டாம் வகுப்பிலிருந்து நாகர்கோயிலில் படிப்பைத் தொடர்ந்தேன். அதற்கு முன் 1-4 வரை கீரிப்பாறை என்னும் கிராமம் என்று கூட சொல்ல முடியாத ஒரு காட்டுப்பகுதியில். ( அப்பாவுக்கு வனத்துறையில் வேலை). 4-7 வரை அருப்புக்கோட்டையில், அப்பாவுக்கு பணி இடமாற்றம் காரணமாக.)

வகுப்பில் நான் நான்காவது பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டேன். அதில் குப்புசாமி,பாலு,பாலசுப்ரமணி, ஸ்ரீனிவாசன் என்று ஏற்கனவே நான்கு பேர். சீக்கிரத்தில் சகஜமாகி விட்டோம்.

எங்கள் ஜோதியில் முருகேஷ் என்பவன் ஐக்கியமானான். அவன் ஒரு interesting personality. அதிதீவிர சினிமா நடிகைகள் ரசிகன். இன்ன நடிகைதான் என்றில்லாமல் டீன் ஏஜ் ஹீரோயினில் இருந்து நடுத்தர வயது கடந்த ஆன்ட்டி நடிகைவரை அவனுக்குப் பிடிக்கும்.

தன்னுடைய அபிமானத்தை வெளிக்காட்ட , தினத்தந்தி,தினகரன் பேப்பர்களில் வரும் சினிமா விளம்பரங்களை உள்ளடக்கிய பக்கங்களால் புத்தகங்களுக்கும், நோட்டுக்களுக்கும் அட்டை போட்டு வருவான். பாடம் நடக்கும் வேளைகளில் போட்டோ பார்த்து நேரம் போக்குவோம்.

Friday, July 17, 2009

திரைப்படங்களில் கதாநாயகி அறிமுகம் - ஒரு பார்வை ..!

தமிழ் சினிமாவில் hero worship தான் அதிகம். செம பில்டப்புகளோடு அந்தரத்தில் பறந்தபடியே வந்து கயிறு கட்டி டான்ஸ் ஆடும் காட்சிகள், இந்த இளம் தலைமுறை நடிகர்களிடையேயும் , நடுத்தர வயது கடந்த சரத் குமார் , விக்ரம் முதல் நஷ்டக்கணக்கு காட்ட படமெடுக்கும் தொழிலதிபர் கம் தயாரிப்பாளர் கம், டைரக்டர் கம், நடிகர்கள் J.K.ரித்தீஷ், S.Ve.சேகர் மகன் அஸ்வின் சேகர் வரை ஒரு தீராத மோகத்தையும் நமக்கு தலைவலியையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் சில ரசிக்கும்படியான hero introduction பாடல்களும் உண்டு. கற்க கற்க -வேட்டையாடு விளையாடு. நச்சென்ற பாடல் மற்றும் காட்சிகள்.
இதுபோன்ற பாடல் காட்சிகள் super star தவிர யாருக்கும் பொருந்துவதில்லை என்பது என் எண்ணம்.
ஆச்சரியப்படும் விதமாக ஹீரோயின்களுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சமாவது வாய்ப்பும் கொடுக்கிறார்கள். She is a fantacy - காக்க காக்க ,சுற்றும் பூமி சுற்றும் - டும் டும் டும் , இப்படி கொஞ்சம் அடுக்கலாம், ஜோதிகா நிறைய ஆடியிருக்கிறார்.

இப்போது நாம் பார்க்கப்போகும் நடிகை 80 களில் மிக டீசென்ட் ஆக நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர். இப்போதும் அழகான அம்மா, ஆன்ட்டி நடிகை. நதியா. தன் பெயரில் hair style (நதியா கொண்டை என்று ஒன்று உண்டு) , புடவைகள் ,இன்ன பிற இதர பொருட்கள் என்று மிக famous ஆக இருந்தவர்.

பாடு நிலாவே பட ஷூட்டிங் சமயத்தில் நதியா எங்கள் வீட்டில் வைத்து மேக்கப் போட்டுக்கொண்டதாக அம்மா சொன்னார். எனக்கு அப்போது 2 அல்லது 3 வயது இருந்திருக்கும். ஒரு சீப்பைக் கூட அந்த மேக்கப் குழுவினர் விட்டுச்சென்று விட்டனர்.ரொம்ப வருடங்கள் அந்த சீப்பு "நதியா சீப்பு" என்ற பெயரில் எங்கள் வீட்டில் இருத்து. 1999 இல் வீடு மாறி சொந்தவீட்டுக்கு வரும்போது தூக்கி எறிந்துவிட்டோம்.

இவர் படங்களில் அறிமுகம் ஆகும் காட்சி மூன்றே விதங்களாகத்தான் இருக்கும். நதியா காலையில் எழுந்து jogging போவார். ரம்யமான பாதையில் செல்வார். ஒரு இயற்கை காட்சியை பார்ப்பார். நதியோரம் செல்வார். நீரில் துள்ளும் மீன்களைப் பார்ப்பார். சமயம் பார்த்து குயில் வேறு கூவித் தொலையும். அப்புறமென்ன பாட்டுதான். பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க ..

சரி இரண்டாவது வகையைப் பார்ப்போம். நதியா காரில் ஒரு மலைப்பாதையில் செல்வார். சமவெளியில் ஓட்டவே மாட்டார். மலைப்பாதை ஓரம் கண்டிப்பாக முன்னர் பார்த்த நதி ஓடியே தீரும். இப்படியே அழகை ரசித்தவாறே போகும் வண்டி திடீரென்று நின்றுவிடும். காரணம்..? பெட்ரோலோ ப்ரேக்கோ இன்ஜினோ இல்லை நண்பர்களே..!
radiator இல் தண்ணீர் காலியாகி நின்று விடும். அப்புறம் நதியா தண்ணீர் கேன் ஐ எடுத்துக்கொண்டு நீர் பிடிக்க அந்த நதிக்கு வருவார், அதே ரம்யமான சூழ்நிலை, மீன்கள்,தெளிவான நீர், தப்பாது வரும் குயிலோசை.. பாட்டு ரிபீட்டு....

இப்போது மூன்றாவது வகை .. a combination of either one of the above said situations along with the hero . Jogging செய்து கொண்டோ, அல்லது தண்ணீர் பிடிக்கவோ நதியா வருவாரா.. அப்போது இந்தமுறை குயிலின் பாட்டுக்கு பதில் ஹீரோ பாடுவார். "மலையோரம் வீசும் காற்று..!" இந்த பாடலில் மயங்கி ஹீரோவுக்கு தெரியாமல் நதியா பின்தொடர்ந்து செல்வார்.அப்பிடியே sympathy creat ஆகி லவ்ஸ் டெவலப் ஆயிடும்.இதைத்தான் அந்த அம்மிணி காலம்காலமாக செய்து கொண்டிருந்தார்.
இவ்வாறு ஹீரோக்களைப் போலவே நதியா தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்டது மிகுந்த ஆச்சரியமான விஷயம்தானே? 






Thursday, July 16, 2009

நாயைக் கடிக்கும் பூனைக்குட்டிகள்...!

இது பாண்டிச்சேரி நேரு வீதியின் அருகிலுள்ள ஒரு வீதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் . கொழுக்மொழுக்கென்று அழகழகான நாய்க்குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. பாரதி பாடியதைப்போல் சாந்து நிறமொன்று, சாம்பல் நிறமொன்று,பாலின் நிறமொன்று , பாம்பின் நிறமொன்று என வகைக்கொன்றாக குட்டிகள். Bachelor வாழ்கையில் வளர்க்க முடியாது என்பதால் அந்த கருப்பு நிற குட்டியை மனமின்றி அங்கேயே விட்டு வந்து விட்டேன் .

சரி இந்த புகைப்படத்தைப் பார்த்தால் நமக்கு முதலில் என்ன தோன்றும் ?
தாய்ப் பாசம்...? ஒரு நாய்க்குட்டியை எடுத்துப் போக தோன்றும் ..! அதிக பட்சம் அந்த தாய்க்கு பிஸ்கட் வாங்கிப் போட தோன்றலாம்..!

போன வாரம் நான் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது என் பக்கத்து வீடு குட்டி பையன் ஹரிஷிடம் காண்பித்து இது என்ன என்று கேட்டேன். அவன் அதை சற்று நேரம் பார்த்து விட்டு சொன்ன பதில் மிக விநோதமானது. பூனைக் குட்டிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாயைக் கடிக்கின்றனவாம்.
பொதுவாக என் வீட்டைச் சுற்றி பூனைகள் அதிகம். என் அம்மாவிடம் நட்பு பாராட்டியும் என் தம்பியிடம் பயப்படுவது போன்று நடித்தும் , நான் எப்போதாவது வீட்டுக்கு போனால் " யார்ரா இவன் புதுசா இருக்கான் ..?" என்று வினோதமாக ஒரு look விட்டு விட்டு தன் வேலையைத் தொடர்வதுவுமாக ஒரு 10 பூனைகள் வீட்டைச் சுற்றி வளைய வந்துகொண்டிருக்கும்.


நாய்கள் எங்கள் வீட்டருகில் ரொம்பவும் குறைவே. குறிப்பாக குட்டி நாய்கள்.. மாற்றாக பூனைகளோ வருடா வருடம் மும்மடங்காகப் பெருகி வாழ்வன. சுனாமி வந்த சமயத்தில் மீன் கிடைக்காமல் நாங்கள் சைவ சாப்பாடு சாப்பிட்டபோது பூனைகள் மீன் இன்றி மிகவும் இளைத்து காணப்பட்டன. அப்போது நிறைய பூனைகள் புலம் பெயர்ந்து விட்டன. இருந்தாலும்ஒரு குட்டி பிறந்து நான்கைந்து மாதங்களில் அதுவும் குட்டி போட்டுவிடுகிறது.இதன் காரணமாக பூனைகளையே அதிகம் பார்த்து வளர்ந்த ஹரிஷ் சொன்ன பதிலைப் பார்த்தீர்களா.?

மூன்றாம் கோணம்..பெயர்க்காரணம் ...

மூன்றாம் கோணம் .. ஆங்கிலத்தில் "Third angle" .
எந்த ஒரு சம்பவம் அல்லது விஷயத்தையும் ஒவ்வொரு மனிதனும் இரண்டு விதமாக பார்க்கிறான். சுலபமாக சொல்வதென்றால் 12 B படத்தில் வருவது போல ஹீரோ பஸ்ஸில் ஏறினால் , ஏறாவிட்டால் -விளைவுகள். ஆனால் இரண்டும் தாண்டி மூன்றாவதாகவும் ஒரு விளைவு இருக்க கூடும். அது போன்ற ஒரு கோணத்திலிருந்து சம்பவங்கள் பற்றி எழுதலாம் என்ற எண்ணம். இது தவிர பொதுவான தகவல்கள் , நிகழ்வுகள் பற்றியும் எழுதவும் உத்தேசம்.